Archive for September, 2008
Tuesday, September 30th, 2008
மலர்களில் இருந்து தேனை
உறிஞ்சி செல்லும் வண்டு போல்
நீயும் உறிஞ்சி செல்கிறாய்-என்
நட்பாகிய தேனை..
நம் நட்பின் சுவை ஆயுளுக்கும்
உன் மனதை குளிர்விக்க
என்றும் உன்னுடன் கழித்த இனிய
நினைவுகளுடன் நான்…
-ம.செல்வராணி
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, September 25th, 2008
நட்பு என்பது தேன்கூடு!
களையாதிருக்கும் வரை..
நட்பு என்பது கண்ணாடி!
உடையாதிருக்கும் வரை..
நட்பு என்பது பூந்தோட்டம்!
வாடாதிருக்கும் வரை..
நட்பு என்பது காற்றாடி!
சுழன்று கொண்டிருக்கும் வரை..
நட்பு என்பது உயிர்நாடி!
நான் உயிரோடிருக்கும் வரை..
-ம.செல்வராணி
cool.selvarani@rediffmail.com
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, September 24th, 2008
சிக்கல்களில் இருந்து சீறிப்பறக்க
சிந்தனை என்ற சிறகு விரித்தேன்
உற்சாகத்தில் உந்திப் பறந்தேன்
தோல்வி என்ற கானலைக் கடந்து
நாணம் என்ற நாணலை வளைத்து
நம்பிக்கை என்ற நதியில் மூழ்கி..
வெற்றி என்ற விண்ணை மட்டும்
விரக்தி இன்றி விரட்டிப் பிடிப்பேன்!
- ம.செல்வராணி
- Posted in தமிழ்
- No Comments »
Monday, September 22nd, 2008
சிற்பிக்குள் இருக்க விரும்பாத எந்த நீர் துளியும் முத்தாக முடியாது…
- Posted in தமிழ்
- No Comments »
Sunday, September 21st, 2008
அன்று,
பக்கத்து வீட்டு
பையனீடம் என்னடீ
பல்லை காட்டறா?
பாகீறவர்கள் தப்பா
நினைக்கமாட்டார்கள்
அதட்டீனார் அப்பா!
இன்று,
பல்லை காட்டி
பையனீடம் சிரிக்க சொல்
பார்க்க வரவங்கள்
தப்பா நினைக்கபோறாங்க?
ஆர்பாட்டம் செய்தார் அப்பா!
- Posted in தமிழ்
- No Comments »
Sunday, September 21st, 2008
கூடவே இருதவள்
கூபீடும் தூரம் சென்றாலே
கூப்புற படுத்து அழுவுரேன்
இதுதான் காதலா?
- Posted in தமிழ்
- No Comments »
Friday, September 19th, 2008
நீ உச்சரிக்கும் போது மட்டும்
அழகாய் தோன்றும் என் பெயர்
நீ அழைக்கும் போது மட்டும்
செல்லமாய் சிணுங்கும் என் தொலைபேசி
நீ நெருங்கும் போது மட்டும்
அலைபாயும் என் விழிகள்
நீ அருகில் இருக்கும் போது மட்டும்
பேச மறுக்கும் என் இதழ்கள்
நீ தொலைவில் இருக்கும் போது மட்டும்
கவிதையாகும் என் எழுத்துக்கள்
என்ன மாயம் செய்தாய் எனக்குள்
சொல்லி விடு என்னிடம் மட்டும் !!!
- Posted in கவிதைகள்
- No Comments »
Thursday, September 18th, 2008
வெறுப்பு
பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
நோயால் அல்ல.
பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
காதலால் அல்ல.
பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
துக்கத்தால் அல்ல.
பசியை நாங்கள் முழுமையாக வெறுக்கிறோம்,
காரணம் வேண்டுமா?
என் சமுதாயமே…
நாங்களே ஏழைகள்….
ஒருவேளை சோற்றுக்கு
காலை முதல் மாலைவரை வேலை….
மூன்றுவேளை சோற்றுக்கு..
நாங்கள் பசியை அறியவில்லை..
நாங்கள் அறியவில்லையென்றால்
பசி எங்களை அரித்துவிடுகிறது..
பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
முழுமையாக…
எங்கள் மரணநாள் வரையிலும்….
by
subha
subhacathereen@gmail.com
http://subhacharu.blogspot.com/
- Posted in தமிழ்
- No Comments »