Archive for April, 2008
Wednesday, April 30th, 2008
கவிதைகளை தமிழில் வழங்குங்கள். ஆங்கிலத்தில் எழுதப்படும் கவிதைகள் நீக்கப்படும். - இணைய நிருவாகம்.
- Posted in தமிழ்
- No Comments »
Sunday, April 13th, 2008
தன் நண்பர் மகன்
என்னை விட அதிக மார்க்
வாங்குகிறானென்று
அங்கலாய்த்துக்கொண்ட
என் தந்தைக்குச்சொன்னேன்
என் தந்தையை விட
அவன் தந்தைக்கு
அறிவதிகமென்று,
நன்றாய் படிக்கும்
ஒருவனைக்காட்டி
இவனைப்பார்த்தாவது
திருந்தச்சொன்ன
ஆசிரியரிடம் கேட்டேன்
ஐந்தாம் வகுப்பை விட்டு
நீங்கள் கடக்க
யாரைப்பார்த்து
திருந்தவேண்டுமென்று,
சாலையில் வாகனத்தில்
ஒருத்தியுடன் செல்லும்
ஒருவனைப்பார்த்து
அதைப்போல் நீயும்
செல்லவேண்டுமென்று கூறிய
காதலியிடம் சொன்னேன்
வாகனத்தை நான்
பார்த்துக்கொள்கிறேன்
உன் தங்கையின் சம்மதத்தை
கேட்டுச்சொல் என்று…
என் வயது தோழர்களை
பார்த்தாவது திருந்தச்சொன்ன
என் தாத்தாவிடம் சொன்னேன்
உங்கள் வயது தோழர்கள்
போய்ச்சேர்ந்துக்கொண்டிருக்கிறார்களென்று,
அடுத்தவீட்டு அலமேலு
புதுச்சேலை கட்டியிருக்கிறாளென்று
புலம்பிக்கொண்டிருந்த
மனைவியிடம் சொன்னேன்
எதிர்வீட்டு பார்வதி
மண்ணெண்ணெய் ஊற்றி
கொளுத்திக்கொண்டாலாமென்று…
உபதேசிகளைக்கண்டால்
உரக்கச்சொல்லுங்கள்
உங்களைக்காட்டிலும்
உயர்ந்தவரொருவர்
உலகில் உள்ளாரென்று.
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
Please Post your Comments to mahasin2005@yahoo.co.in
- Posted in தமிழ்
- No Comments »
Saturday, April 12th, 2008
கவிதைகளை படைப்பவர்கள்
கவிஞர்கள் என்றால்…
உன்னைப் படைத்த உன்
பெற்றோரும் கவிஞர்கள் தானே…
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, April 9th, 2008
தெருவே கதியென்று கிடந்தால்
நீயும் எவனுக்கோ கணக்கெழுதி
வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்
உங்கப்பாவைபோன்று
என்கிறாள் அம்மா
இப்படியே தொலைக்காட்சியில்
ஜீவனை தொலைத்தால்
எவனும் பொண்ணு தரமாட்டான்
அப்புறம் கெடச்ச ஓட்ட ஒடிசல
வச்சு காலம் தள்ளனும்
என்னை மாதிரி
என்கிறார் அப்பா
ஆகாயத்தில் பறக்கும்
ஒரு விமானத்தைக்காட்டி
நீ அத ஓட்டிட்டு போகணும்
நான் அதுல உக்காந்து வரணும்
என்கிறாள் பட்டி
இப்பிடி புழுதியில ஆடுனா
கம்போண்டரா கூட ஆக முடியாது
நண்பர்களுடன் இருந்தவனை
கதற கதற அலாக்காய் தூக்கி
வீட்டில் சேர்க்கிறார் தாத்தா
மருத்துவத்தை முடித்து
விமான ஓட்டுபவனாகி
பெரிய இடத்துப்பெண்ணை
கைப்பற்றும் வழியை
தன் இரண்டம் வகுப்பு
புத்தக மூட்டைக்குள்
தேடிப்பார்க்கிறான் சிறுவன்.
s.m. Sunaith Hasani
Pls ur Comments to mahasin2005@yahoo.co.in
- Posted in தமிழ்
- No Comments »
Saturday, April 5th, 2008
எடுத்துச்செல் உன்னோடு
உன் நினைவுகளையும்
பூகம்பம் தின்று தீர்த்தாடி
விட்டுச்சென்ற மிச்சத்தில்
லாபமில்லை.
அம்புலிமாமாவில் மட்டுமே படித்த
ராட்சஸி பெண்ணான கதை
நிஜமாய்ப்போன
அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான்மீள்ந்த பாடில்லை.
உன்னை ராட்சஸியாகவும்
நாதஸ்வர மேளதாளத்தை
ஜனங்களின் கூக்குரலாகவும்
உன் ஆபரணங்களை
ஒட்டியிருக்கும் மாமிசத்துண்டுகளாகவும்
கற்பனை செய்து
ஆறுதல் தேடுகிறேன்.
இருந்தாலும் உணர முடிகிறது
இது காலம் கடந்த ஞானமென்று
உன் மனது முனகும் சப்தத்தை.
இப்பொழுதெல்லாம்
இரவின் இருளோடு
பயமும் சேர்ந்து
என்னை தொற்றிக்கொள்கிறது
உன் நினைவுகளில்
சிக்கி சீரழிந்து போவேனென்று.
அதுவும் குளிர்கால இரவென்பதால்
பயமும் சேர்ந்து நீள்கிறது
அதன் இரவைப்போல்
பகலில்தான் உணர்கிறேன்
இரவே ஆயிரம் மடங்கு மேலென்று.
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in
- Posted in தமிழ்
- No Comments »
Saturday, April 5th, 2008
அன்னையே….
அகிலத்தில் ஏற்படும் ஆயிரம்
உறவுகளுக்கு முதலுறவாய்
அமைந்தவளே…
என்னை இவ்வுலக வாசிக்க
மாதங்கள் பத்து நீபட்ட
பரதிவிப்பை நானுமறிவேன்.
ஏனைன்றால் உனக்குள்ளிருந்தவள்
நானாயிற்றே தாயே!.
ஆதி முதல் அந்தம் வரை
கற்பித்தவளே…
உனக்காக நானிருப்பேன்
என்றும்!
- Posted in தமிழ்
- No Comments »
Friday, April 4th, 2008
இன்னும் என்னிடம்
என்னடி எதிர்பார்க்கிறாய்..
உயிர் மட்டும்தான் உள்ளது…
- Posted in தமிழ்
- No Comments »
Friday, April 4th, 2008
மனிதனை மனம்
மலரச்செய்யும் மலரே!
மலருக்கு மணமுண்டென்பதை
யாவருமறிவர்,உனக்கு
மனமும் உண்டென்பதை யாரறிவார்?
அதனால்தான் நீ மனங்கள்
இன்னைய பாலமாகிறாயோ?
- Posted in தமிழ்
- No Comments »
Friday, April 4th, 2008
ஊருக்கு பயணிக்கையில்
உள்மனதில் தோன்றும்..
மார்கழி மாதப்பனியில் விடியல்
மாலைநேர மல்லிகை வாசம்
மலைக்கால தவலைக்குரல்
தென்னை மரநிழலில் தூக்கம்
ஒன்றையும் அனுபவிக்காமல்
திரும்பும்போது தோன்றும்
அடுத்தமுறை
பார்க்கலாமென்று……..
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, April 3rd, 2008
காலம் கடந்தாலும்
கல்லூரி வாழ்கை
கசங்கத நிணைவுகலாய்
இன்றும் மனதில்…
காலை சூரியனை
கண்டேய்ராத நாம்.
செமஸ்ட்ரின் போது மட்டும்
விடிந்தும் முழிதிருக்கும்
அந்த நாட்கள்
வார விடுமுறையில்
வீட்டுக்கு சென்றாலும்
வீடுதிக்கு எப்பொது
செல்வொமென்று பறக்கும் மனது..
மாதமொன்றுக்கு முன்னையே..
திட்டமிடும் பிறந்த நாட்கள்..
மணிக்கணிக்கல் அரட்டை..
ஆனால் இன்றோ..
நாலைந்து மாதத்திற்கு
ஒருமுறை ஹாய்..
வருடத்திற்கு ஒரு ஃபோன்..
முடிந்த பிறந்தநாளுக்கு
வாழ்த்துக்கள்…
காலத்தின் வலிமை
என்னவொ….
- Posted in தமிழ்
- No Comments »