Archive for January, 2008
Friday, January 25th, 2008
மழை..!
உலர்ந்த பூமியை
முத்தமிட்டு நனைக்கவந்த
ஒற்றைத்துளி நீயோ!
மேகக்காதலன்
பூமிக்காதலியைப் பார்த்து
வடித்த வா(ய்)நீரோ!
ஏழைவயல் நனைத்து
போகும் உயிர் காக்க வந்த
இறைகமண்டல நீரோ!
விளைநிலமல்லாது
களைநிலம்கூட வளர பகிர்ந்தளிக்கும்
சமநிலை இறை(ரை)யோ!
பள்ளி கல்லூரிகளுக்கு
இடைக்கால விடுமுறை அளிக்கவந்த
சட்ட வல்லுனரோ!
காலம் மறந்துவிட்ட
கடமைமுறைகளை பருவம்தவறாமல்
பெய்து நினைவூட்டவந்த
உத்தம புருஷரோ!
நீலக்கடலுறுஞ்சி
கருமை நிறம் மாறி
பச்சைநிலம் செழிக்க
வெள்ளை நீர்கொடுக்கும்
வண்ண மாயனோ
மழையோ
நீயோ.
- Posted in தமிழ்
- No Comments »
Friday, January 25th, 2008
சிதறல்கள்
மலர்ந்திடும் வாசப் பூவிலும்
புலர்ந்திடும் வைகறை பொழுதிலும்
வீசிடும் தென்றல் காற்றிலும்
பேசிடும் பிஞ்சுக் குழந்தையிலும்
தூவிடும் முத்துச் சாரலிலும்
கூவிடும் குயிலின் குரலிலும்
குளிர்ந்திடும் பௌர்ணமி நிலவிலும்
ஒளிர்ந்திடும் மாலை சூரியனிலும்
படர்ந்திடும் காலை பனியிலும்
நடந்திடும் பசுமை புல்வெளியிலும்
ஆடிடும் வண்ண மயிலிலும்
ஓடிடும் பஞ்சு மேகத்திலும்
உனக்கான என் காதலின்
எண்ணச் சிதறல்களை
ஒவ்வொரு துளியாய்
ஒவ்வொன்றிலும் சிதறவிட்டிருக்கிறேன்…
- Posted in தமிழ்
- No Comments »