Archive for August, 2007
Friday, August 31st, 2007
செங்காடும் கரிசல்பூமியும்
கலந்திருக்கும் அழகான கிராமம்
சிமிழ்விளக்குகளும் சில்வண்டுகளும்
ஆக்கிரமித்துக்கொள்ளும் கிராமத்து இரவு
அறிந்த வயதில்தான் காதல் வருமென்றால்
அறியாத வயதிலேயே வருகிறது நட்பு
நட்பின் இலக்கணம் தெரியாமலேயே
நானும் அவனும் வாழ்ந்த
அழகான கிராமம் அது….
நாங்கள் வெண்சட்டை அணிந்த நாட்களைவிட
கிராமத்தின் மண்சட்டை அணிந்த
நாட்களே அதிகம்….
அடம்பிடித்து பள்ளிசெல்ல மறுத்து
அரசமர நிழலில் ஒளிந்திருந்த
நாட்கள் தான் எத்தனை எத்தனை…
கோகுலத்து கண்ணன் போல் பாவித்து
கோமாதா பின் சுற்றிய
நாட்கள்தான் எத்தனை எத்தனை…
அன்றொரு நாளும் இன்றொரு
நாளுமாய் சென்று வந்து அந்த
அரசுப் பள்ளியில் படித்து முடித்தோம்
எங்கள் ஆரம்ப காலத்தை…
கடிதம் எழுத கற்றுத்தருவதற்காக
காலம் எங்களை பிரித்தது
விடுதியில் நானும் வீட்டிலிருந்து […]
- Posted in தமிழ்
- No Comments »
Friday, August 31st, 2007
அன்பே…
எனக்காக அழ நினைத்தால்
என் கல்லறையில்
அமர்ந்து அழு….
உன்னால்
நான்தான் வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரால்
என் கல்லறையில்
முளைத்திட்ட
சிறு செடியாவது
வாழட்டுமே…
நம் காதலின் சின்னமாக…..
by cathereen subhacathereen@gmail.com
- Posted in தமிழ்
- 1 Comment »
Thursday, August 30th, 2007
என் கனவுகள்
விதைக்க இடம்
தேடினேன்…..
கிடைத்துவிட்டது…
இனி விதைக்க போகிறேன்..
கனவை பற்றி
உங்கள் கருத்து…..
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, August 30th, 2007
உன் இதயம் இரும்பென்று
தெறியாமல் மோதியதில
என் இதய கண்ணாடியில்
சேதம்……….
காதல் தோல்வி
mailme at:mathi_mannai@yahoo.co.in
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, August 29th, 2007
பாதை அறியாப் பாதங்கள்
======================
உணவை மறந்தேன்,
உடலை மறந்தேன்,
உள்ளிருந்து அழும்
உயிரோசையை மறந்தேன்.
காலத்தை மறந்தேன்,
கண்களை மறந்தேன்,
கண்மணிக்குல் ஒளிந்திருந்தக்
கணவையும் மறந்தேன்.
காற்றுக்குக் கூட
கட்டுப் படாத நான்,
கார்ட் போர்டால் ஆன
க்யூபிக்கலுக்குள் கட்டப்பட்டேன்.
தாய்ப்பாசம் கூடத்
தவணை முறையில் தான்
தினமும் பில் எகிற
தடவிக்கொண்டே செல் ஃபோனில்
சும்மா நச்சூன்னு இருந்தது
சூப்பர்வைசரின் ஈ- மெயில்.
“லீவ் அப்ரூவ் ஆயிடுச்சுடா மாமு..”
லேட்டஸ்ட் நியூஸ் செல்லில் பறந்தது.
எப்ப போகலாம், எப்ப போகலம்
என்ற படி இளித்தது…
எப்பவோ திறந்து போடப்பட்ட
என்னுடைய ‘ட்ராவல் பேக்’.
எப்படி மறக்க முடியும்,
எகிறி குதித்து விளையாடிய
என் வீட்டு முற்றத்தை,
எதிர் வீட்டு தின்னையை.
படுத்துறங்கிய தாய் மடியை,
பட்டம் விட்ட மாடியை…
பாசத்துடன் […]
- Posted in தமிழ்
- 2 Comments »
Tuesday, August 28th, 2007
காற்றோடு பேசும் இலைகளுக்கு தெரிவதில்லை
ஒரு நாள் காற்றே தம்மை கிழிக்குமென்று;
மலரோடு உறவாடும் வண்டுகளுக்கு தெரிவதில்லை….
ஒருநாள் மலரே தம்மைக்கொன்றுவிடுமென்று;
நிலவோடு காதலாகும் அல்லிக்கு தெரிவதில்லை
விடிந்தால் நிலவே தள்ளிச் சென்றுவிடுமென்று;
கிழிந்தாலும் அழிந்தாலும் பிரிந்தாலும்
இவைகள் வழக்கத்தை மட்டும் மாற்றுவதில்லை:
தோற்றுவிட்ட போதும் துவழாமல் மீண்டும்
விட்டுவிட்ட வாழ்க்கையை தொட்டுவிடதுடிக்கும்
இலைகளையும் வண்டுகளையும் மலர்களையும்
விடவா மனிதா நீ தாழ்ந்து விட்டாய்?
மீன் நீந்துவதையும் மனிதன் முயற்சியையும்
கற்றுத்தராமலேயே அறிய வேண்டியதல்லவா?
ஒருமுறை வாழ்வில் தோற்றுவிட்டால்
மறுமுறை வெற்றி இல்லையென்று
ஒருமுறையும் மனதில் எண்ணிவிடாதே
உன் மனதை நீயே கொன்றுவிடாதே…
அறிவாயோ மனிதா சிறுவாய்கொண்ட எறும்பும்
உறக்கம் கொள்வதில்லை ஒருநாளும்:
உறக்கல் இல்லா […]
- Posted in தமிழ்
- 1 Comment »
Monday, August 27th, 2007
ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்
சென்னிறப் புரவியில்
வெண்ணிற ஆடை அணிந்த
ஒரு தேவதை வந்தாள்
மெல்ல என் கரம் பற்றி
வா என்றாள்,
எங்கே என்றேன்,
சொன்னால்தான் வருவாயோ?-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள்
எதற்காக என்னை
இங்கே அழைத்து வந்தாய்-என்றேன்,
இன்னுமாப் புரியவில்லை என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கயில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்
சந்தேகம் தீர்த்து முடிக்கையில்
மீண்டும் கனவின் நினைவு […]
- Posted in தமிழ்
- 2 Comments »
Thursday, August 23rd, 2007
நேற்று மறைந்த அந்திமாலைச் சூரியன்
அதிகாலை ஐந்துமணிக்கு உதயமானது:
அதிக நேரம் உழைப்பதற்கு என்றெண்ணிய
வேளையில்தான் புரிந்தது-இன்று
தேதி பார்த்துவிட்டு வேகவேகமாய்
வந்துள்ளது உனக்கு வாழ்த்து சொல்வதற்கு
இரவு முழுவது காத்திருந்துவிட்டு
விடைபெறும் வேளையில் வாழ்த்துசொல்லிவிட்டு
ஓய்வெடுக்க ஓரமாக சென்றுகொண்டிருந்த
நிலவைப் பார்த்தபோது-கோபத்தால்
இளஞ்சிவப்பு….. சூரியனின் முகத்தில்
வாழ்த்து சொல்ல வழி தெரியாமல்
எப்படியும் பறிக்க வருவாயென்று-ரோஜா
இதழ்களில் படிந்திருந்தது பனித்துளிகள்
பூஞ்சோலைகள் தோறும் தேடிச்சென்று
சுகமான வாசங்களை சேகரித்துக்கொண்டு
வார்த்தையில் சொல்லத் தெரியாத வாழ்த்துக்களை…..
வாசங்களில் சொல்லி நின்றது தென்றல்
எல்லோரும் வாழ்த்துசொல்லிட என்ன
காரணம் என்றெண்ணிய போதுதான் உனக்கே
புரிந்தது உன் பிறந்த நாளென்று
விழிகளின் பிறந்த நாளை இமைகள் மறக்குமா-இதோ
என் வாழ்த்துக்களாய் இந்த […]
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, August 22nd, 2007
வானவில்லின் ஒருவண்ணம் எடுத்து
சந்தனமும் தங்மும் ஒன்றாக கலந்து
பிரம்மன் செய்து வைத்த அச்சிலே
சிறந்ததை எடுத்து கலவையை ஊற்ற
நான் காதலிக்க உருவானாய் நீ
மல்லிகை மொட்டுகளை மலரவிட்டு
மாலையாக ஒன்றையொன்று சேர்த்து
உன் கருங்குழலில் சூடிய போது
மல்லிகையின் ம்ணம் கூடியது
மதி உதிக்கும் நேரமெல்லாம்
நதி போல உன் நினைவுகள்
என் சிறுநெஞ்சில் ஓடிவிளையாட-என்
சின்னச்சின்ன இன்பங்களை சொல்லத்தெரியவில்லை
விடிந்தால் மறைந்திடும் நிலவுபோல
விழித்தால் விலகிடும் கனவுலகில்
எத்தனை காலங்கள் வாழ்வதென்று
என்னை உன்னிடம் விற்றிட
இதயத்தை பேரம் பேசினேன்
முத்துப்பற்கள் வெளியே தெரியாமல்
சிறு செவ்விதழ்களை ஓரமாக சுழித்து
செல்லாக்காசு உன் இதயம் என்று
சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றாய்
அதுவரை நில்லாத என் […]
- Posted in தமிழ்
- No Comments »
Tuesday, August 21st, 2007
நகர்ந்துவிட்ட நாட்கள் அது:
நனைந்துவிட்ட இலவம் பஞ்சை
பிழிகையில் வடிகின்ற நீர்த்துளிபோல்
இன்று என்னுள் சொட்டிக்கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்…..
நான்காண்டு நம் கல்லூரி வாழ்வில்
ஓராண்டு முடிந்த பின்புதான்
நம் நட்பின் அரங்கேற்றம் வந்தது
அதுவரை நடந்ததெல்லாம்
அரங்கேற்றத்திற்கான பயிற்சிகள் போலும்
எத்தனைமுறை நான் அழைத்தபோதும்
அத்தனைமுறையும் தொலைபேசியின் வழியே
உன் குரல் என் காதில் இனிமையாய்…
சடசடவென்று சத்தம் கொடுத்தபோதும்
ஜன்னலோர மழைத்துளியின் சுகம்போல்
ஆண்டுதோறும் வரும் என் உதய நாளுக்கு
அன்னையையும் அழைத்து சென்று
அழகான நினைவுப்பரிசு ஒன்று வாங்கினாலும்
இல்லம் தேடிவந்து
நான் வாங்கவேண்டுமென்று
செல்லமாய் எனக்கு உத்தரவிடுவாய்
எனக்கு முதல் மாதம் உனக்கு வந்த
உன் வாழ்வின் சிறந்த நாளாம்
உன் பிறந்த நாளில்
உன் […]
- Posted in தமிழ்
- 1 Comment »