Archive for May, 2007

Tuesday, May 29th, 2007

விலங்கு

நான்     உன்மனம்   விளங்காதவனல்ல
உன்     மனம்விட்டு  விலகாதவன்
உனை    கைதாக்கும்   விலங்கானவனல்ல
நம்காதல் கைதியாகிய  விலங்கு.

Tuesday, May 22nd, 2007

கவியானவளே

என்
இதயமென்னும்
சிறைக்குள்
சிக்கிவிட்ட
உன் விம்பம்
கற்பனைத்
தோட்டத்தின்
கனவுப்ப்பூக்களாய்
இங்கே மலர்ந்தது
 
 

Monday, May 21st, 2007

ரோஜா

வெள்ளைரோஜாவே
பூக்களின்வசம்
கொண்டு
மென்மையுடன்
பூத்திட்ட உன்
கண்களின் கண்ணீர்
துளிகள் ஏன்
வந்தது நீ
கல்லறைப்பூவாய்
பூத்து விட்டாய்
என்பதாலா?

Monday, May 21st, 2007

சிலந்தி

எனக்கோ
தெரியாது
நீ
விரித்த வலையில்
புள்ளிமானய்
நான்
இரையாய்
நீயெடுத்து
சிதைத்துவிட்டாய்
விதியென
நான்
அழுகின்றேன்
உன்
சதிவலைதெரியாமல்

Saturday, May 19th, 2007

கவியானவளே…[07]

 
 
 
 
கோயில் வாசலில் காத்திருக்கும்
பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன்
உன் வீட்டு வாசலில் உன்
புன்னகைக்காய்
*
தயவு செய்து இனி நீ குளிக்கும்போது
பஞ்சாயத்தில் அறிவித்தல் கொடுத்து
விட்டு குளி ஏனெனில் நீ குளிக்கும்
போது ஊர் கிணறு எல்லாம் வைற்றி
விடுகிறது
*
நீ ஊர் கோயிலில் பாடிய தேவாரத்தை
கேட்டு சாமியாக ஆசைபட்டதில்லை
நீ யாரோ ஒரு அனாதையின் இறந்த
வீட்டில் பாடிய புராணத்தை கேட்டுத்தான்
அனாதையாய் இறந்து போக ஆசைப்பட்டேன்
*
நீ படிக்கும் கல்லூரியில் ஆண்களும்
சேர்ந்துதான் படிக்கிறார்கள் நீ வராத
நாட்களில் மட்டும்தான் பெண்கள்
கல்லூரியாய் மாறுகிறது
*
களைப்பில் எந்த இடத்திலும் இளைப்பாறி
விடாதே அந்த இடத்தில் இளைப்பாறியே
களைத்து போகிறேன்நான்
 
-யாழ்_அகத்தியன்
www.yaalakththiyan.wordpress.com

Friday, May 18th, 2007

ரோஜா

 
உன்னைப் பூ என்று
யார் சொன்னது 
நான் சொல்ல மாட்டேன்
உன்னை யாரும் பறிக்காத
போதும் நீ இன்னும்
வாடவில்லையே
 -யாழ்_அகத்தியன்
www.yaalakththiyan.wordpress.com

Wednesday, May 16th, 2007

இது தான் காதலா?

என் நினைவுக்குள்
மறைந்து
உணர்ச்சிகளுடன்
விளையாடும்
இனிய உணர்வே
காதலா?

Wednesday, May 16th, 2007

இதுதான் காதலா ?!?

தனிமையில் இருக்கும்போது
வாக்கியங்களோடு வாதாடுகிறேன்…!
உன்னுடன் இருக்கும்போது
வாக்கியங்களுக்காக வாதாடுகிறேன்…!!

Tuesday, May 15th, 2007

தேர்வு

திருமணத்திற்கான
உன் தேர்வில் நான்வெற்றியடைந்து
விட்டேன்
ஆனால்
நீயோ வாழ்கை
தேர்வில்
என்னை
தோல்வியடைய
வைத்து விட்டாயே

Sunday, May 6th, 2007

தமிழ்கவிகள்

பாரதி நீ
சொன்னாய் நான்
புரட்ச்சி பெண்ணானேன்
பாவியிவள்
பறிதாவமாய்
நிக்கின்றாள்
என்றனர் ஊரார்