Archive for the ' பச்சகுழந்தை' Category

Monday, February 12th, 2007

இன்று நாளை ஆகிவிடாதோ

மனம் ஆலாய் பறக்கிறது
இன்று நாளை ஆகிவிடாதோ
என்னவள் என்னை காண வருகிறாள்
கேலி செய்பவரை என் சிரிப்பால் உதாசினப்படுத்தி
ஐம்புலம் அடக்கி
காத்திருப்பேன் என் கண்மணி வரவை எதிர்நோக்கி
மனம் புரியாமல் தவிக்கிறது
இன்று நாளை ஆகிவிடாதோ
நாளை என்னவள் என் கைப்பிடிப்பாள்
விழி அசைவில் நாடி நரம்பு முறுக்கேற்றுவாள்
ஓரப்பார்வையில் ஓங்கி வளரும் என் தாபம்
உள்ளுணர்வை அடக்கி தவித்திருப்பேன் நானும்
மனம் ஆசையில் துடிதுடிக்கிறது
இன்று நாளை ஆகிவிடாதோ
என்னவள் அருகில் வர என் உயிர் கூச்சேரிய
என்னை உரசுவாள் என்று நானிருக்க
அமுதம் சொறியும் விழிகளில், நக்கலாய் ஒரு பார்வை
மடையா! நமை சுற்றி நண்பர்களுண்டு;
மறவாதே […]

Monday, February 12th, 2007

நானும் கர்ப்பஸ்த்ரி தான்

எனக்குள் நீ வந்தாய்
கலைத்துவிட மனதில்லை
உன் நினைவுகளை சுமந்தேன்
உரம் போட்டு வளர்த்தேன்
என்னுயிர் கொடுத்தேன்
உன் துடிப்பில் நான் மகிழ்ந்தேன்
ஜனிக்கும் நாள் பார்த்து தவமிருந்தேன்
கனிக்க மருத்துவரில்லை
கேலி செய்யும் நண்பர்களுண்டு
விடாது உன்னை சுமந்தேன்
காலமெல்லாம் சுமந்தாலும் கனமாக தெரியாதது ஏனோ
அடக்கி அடக்கி வைத்த உன் நினைவுகள்
முட்டி மோதும் போது உன்னை வெளியில் விட நினைத்ததுண்டு
மூடி மூடி வைத்தாலும் முடியவில்லை பெண்ணே
நீயாக நீ வரும் நாளை சொல்லிவிடு
ஜென்ம ஜென்மமாக காத்திருப்பேன்
நிரந்தர கர்ப்பிணியாக என்னை விட்டு விடாதே கண்ணே
– காட்டாறு

Monday, November 20th, 2006

சாமியான என் அம்மா

என் அம்மா, காலையில
தூங்கிய என்னை அழ அழ எழுப்பி
முத்தம் கொடுத்து, கொஞ்சி,
குளிக்க வைத்து, சாமி கும்மிட வைத்து,
தல வாரி, சீருடை அணிவித்து
இட்லி ஊட்டி, பள்ளிக்கு அனுப்பினார்
பள்ளியிலிருந்து பாதியிலே
கூட்டி செல்ல வந்தார் என் மாமா
என் தலைமை ஆசிரியர் கலங்கிய கண்களுடன்
என் வகுப்பு ஆசிரியரிடம் பேசினார்
பின், என்னை இறுக அணைத்து அனுப்பி வைத்தார்
என்னை எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிற மாதிரி இருக்குது
வர்ற வழியெல்லாம் வழக்கம் போல்
வள வளன்னு பேசிட்டே வந்தேன்
அம்மா சாமி கிட்ட போயிட்டார்டா
என்றார் என்னை கட்டிப் பிடித்து
சாமி கிட்டேயா? […]

Saturday, April 29th, 2006

எனது கிறுக்கல்கள்

அன்பே
எனது விடியல் என்பது
உந்தன் விழியில்
எனது மரணம் என்பது
உந்தன் மடியில்…..!!!!!!!
நீ இன்றேல்
நான் நிச்சயம்
தற்கொலை செய்ய மாட்டேன்.
என் உணர்விலும்
உயிரிலும் கலந்திருக்கும்
உன்னைக் கொல்ல
எப்படி மனம் வரும் எனக்கு…..?
தினமும் சொல்ல வேண்டும்
என்றுதான் வருவேன்…
ஆனால் உன் கண்களால்
சிவப்பு கொடி பிடிக்கிறாயே…!!!!!
உன் சிரிப்பினால்
என் வார்த்தைகளை சிறை பிடிக்கிறாயே….!!!!!
என் இதயத்தில்
ஓட்டை என்று டாக்டர்
சொன்னபோது நம்பவில்லை..
என் இதயத்தில் நீ நுழைந்த போதுதான்
அது புரிந்தது
நானோ உன் காதல் வேண்டும் என்றேன்.
நீயோ என் கவிதை தான் வேண்டும் என்றாய்…
அடி பைத்தியக்காரி…
எப்படி கவிதை எழுதமுடியும் என்னால்
உன் காதல் இல்லாமல்….?
இந்த உலகத்தில் சிறந்த தண்டனை
என்னவளின் […]