February 27, 2010
- Posted in தமிழ் by jsmalar
- No Comments »
பிறக்கும் முன்
தாயின் கருவறையில்
கிடைத்த நிம்மதி!
பிறந்த பின்
எங்கும் கிடைக்கவில்லை..
மீண்டும் கிடைத்தது
கல்லறையில்..!
- Posted in தமிழ் by jsmalar
- No Comments »
தானத்தில்
சிறந்த தானம்..
இரத்த தானம், கண் தானம்..
இன்னும் சொல்லிக்கொண்டே போனாலும்..
தலை சிறந்தது
நிதானம் தான்!!!
February 25, 2010
- Posted in தமிழ் by karpagarajan
- No Comments »
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி
February 22, 2010
- Posted in தமிழ், கவிதைகள் by nmkv24
- No Comments »
புறப்படுகிறது ஒரு ரயில்
சென்னையில் இருந்து டெல்லிக்கு .
போய் சேர இரண்டு மூன்று நாள் கூட ஆகலாம்.
இந்த மொட்டை மாடி
பட்டாசு சத்தம்
அவர்களுக்கு
ஜன்னல் கம்பிஇநூடே தெரியும்
சாலையோரப்பூக்கள்
இன்று நாம் கொண்டாடுவது
தீபாவளியை அல்ல
அவர்களுடைய கனவை .
தீபாவளிக்காக அல்லாவிட்டாலும்
அவர்களுடைய வரவுக்காகவாவது
பட்டாசு வெடிப்போம் !!
- Posted in தமிழ் by karpagarajan
- No Comments »
மண்ணாசையும் இல்லை
பொன்னாசையும் இல்லை
பெண்ணாசையும் இல்லை
பதவிக்கும் ஆசையில்லை
உதவிக்கும் ஆசையில்லை
பிச்சைக்கும் ஆசையில்லை
இச்சைக்கும் ஆசையில்லை
வாழவும் ஆசையில்லை
சாகவும் ஆசையில்லை
- Posted in தமிழ், கவிதைகள் by nmkv24
- No Comments »
காய்த்து கனிந்த
மரமும்
காய்ந்து கருகிய
மரமும்
காய்கிறது வெய்யிலில்
- Posted in தமிழ் by nmkv24
- No Comments »
புசித்திருந்தாலும்
பரிதவித்திருக்க மாட்டேன்
விதை நெல்லாய் மண்ணில்
புதைந்திருந்தாலும்
மனம் வெதும்பி இருக்கமாட்டேன்
நீர்க்குமிழி நிமிடத்தில் நெருப்பில்
இட்டிருந்தாலும்
நெஞ்சு வெடித்திருக்கமாட்டேன்
சக்கரங்களினூடே வந்துவந்து போகும்
திரவத்தையே பிரதிபலிக்கிறது
சாலையோரத்தில் கிடக்கும்
கிழிந்த தாவணியொன்று!
February 19, 2010
- Posted in தமிழ் by meastroamal
- No Comments »
Kadhal thoolviyei kagithathil pathithu
Nan Kannir Vida Virumba Villai……….
En Kaladi Thadathai Intha Ulagathil pathithu
Aval Kannin Vida Virumbukiren………
February 12, 2010
- Posted in தமிழ் by abu119
- No Comments »
நீ பார்த்து புன்னகை செய்த நாள்..
உன்னோடு கைக்குலுக்கிய நாள்..
பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..
செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..
நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..
எனக்கு பிடித்த நிறத்தில் நீ உடையணிந்த நாள்..
மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..
உன் தோட்ட ரோஜாவை எனக்கு பரிசளித்த நாள்..
நான் கண்ணடிக்க நீ வெக்கப்பட்ட நாள்..
அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை சொன்ன நாள்..
எனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளித்த நாள்..
காதலை சொல்வதற்கு பதில் காபி சாப்டியா என உளறிய நாள்..
தட்டுத்தடுமாறி கடைசியாய் காதலை சொன்ன நாள்..
நானும் காதலிக்கிறேன் என்றதும் பரபரப்பில் “நன்றி” சொன்ன நாள்..
இரண்டு நாட்கள் எனை காணமல் வீட்டிற்கே வந்த நாள்..
உன் காய்ச்சல் குணமாக என் கையை கிழித்துக் கொண்ட நாள்..
என் கண்ணில் தூசி விழுந்ததற்காக நீ கண் கலங்கிய நாள்.
எதிர்பாராமல் ஒரே நிற உடையில் சந்தித்த நாள்..
உன்னோடு கைக்கோர்த்து நடந்த நாள்..
இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்த நாள்..
முதன்முறையாய் உனை காண நான் காத்திருந்த நாள்..
செல்லமாய் என்னிடம் கோபித்து கொண்ட நாள்..
உன் சமையல் என்பதற்காக உப்பில்லா உணவையும் உவகையோடு உண்ட நாள்..
இதமாய் உன் தோள் சாய்ந்து உறங்கிய நாள்..
தோல்வியின் போது உன் மடியில் முகம் புதைத்து அழுத நாள்..
வெற்றியின் போது உன் கரம் பிடித்து மகிழ்ந்த நாள்..
இத்தனை நாட்கள் கொண்டாட இருக்க..
நமக்கெதற்கு தனியாய் “காதலர் தினம்”