May 8, 2008

வாழ்க நீவிர் பல்லாண்டு!

கனவுகளோடும் கற்பனைகளோடும்
காத்திருந்த நாட்களையெல்லாம்
நல்ல கவிதையாக கடத்திவிட்ட
இரு மனங்களின் இடப்பறிமாற்றம்
திருமணமாய் இன்று உருமாற்றம்

வாழ்வில்
ஒருமுறை வரும் இந்த சந்தோசம்
முதல்முறை இவர்களுக்கு இன்று

இறைவன் படைப்பில்
இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பு
இங்கே நிறைவேற்றப்படுகிறது இருகரம்
இணைத்து வைக்கப்பட்ட திருமணத்தால்

நிறைவேற்றப்பட்ட தீர்ப்பில்
இராமனுக்கு அணில்போல
என் பங்கும் கொஞ்சம் சேர்ந்திருக்கிறது
இவர்களுக்கு நான் வாழ்த்து சொல்வதனால்

வாழ்த்துகளை வார்த்தைகளாய் கூறினால்
கேட்கப்படும்போதே…..
மறக்கப்பட்டுவிடும் என்பதால்
வாசகங்களாய் பதிப்பித்து தருகிறேன்
வாழ்க நீவிர் பல்லாண்டு!
 

May 1, 2008

நிலவுப் பெண்ணே…

வெள்ளை நிலவே! எந்தன் மனதை
கொள்ளை செய்தாயே; முகில் கூட்டத்தில்
பள்ளி கொண்டாயே; விழிக்கு குளுமையும்
உள்ளத்தில் மகிழ்வும் ஈந்தாயே; வானத்தாயே.

திங்களே! உனக்கோர் திங்களில் இருபிறையாம்;
அங்கம் குறுகி, பெருகி, விண்ணிடை
பாங்காய் பவனி வந்தே எவரும்
ஏங்கும் வண்ணம்  எழில் பெற்றாயே.

மறைகள் ஓதும் மலைமேல் உறைவோன்
பிறைநுதல் அணிந்து அகம் மகிழ்ந்தான்.
குறைவற்ற நீயோ மாதமோர் நாளில்
மறைந்து போவதன் மர்மம் என்னவோ?

ஆதவன் அன்றாடம் அடங்கும் இடத்தே
புதுமணப் பெண்ணாய், புதிராய் வருகிறாய்;
மாதம், வருடம், யுகமென மாறிடினும்
கதறும் குழந்தைக்கு நல்விருந்தாய் அமைகிறாய்.

முழுமதி ஆகிநீ வானப் பல்லக்கில்
எழுகின்ற போதுன் வனப்பு கூடுதே!
சூழும் மேகம் மகுடமாய் விளங்குதே!
பழுதிலா உனதழகை பருகியது இவ்வுலகே.

- வை.அண்ணாஸாமி - 

April 30, 2008

***

கவிதைகளை தமிழில் வழங்குங்கள். ஆங்கிலத்தில் எழுதப்படும் கவிதைகள் நீக்கப்படும். - இணைய நிருவாகம்.

April 13, 2008

உபத்திர உபாயாசி

தன் நண்பர் மகன்
என்னை விட அதிக மார்க்
வாங்குகிறானென்று
அங்கலாய்த்துக்கொண்ட
என் தந்தைக்குச்சொன்னேன்
என் தந்தையை விட
அவன் தந்தைக்கு
அறிவதிகமென்று,

நன்றாய் படிக்கும்
ஒருவனைக்காட்டி
இவனைப்பார்த்தாவது
திருந்தச்சொன்ன
ஆசிரியரிடம் கேட்டேன்
ஐந்தாம் வகுப்பை விட்டு
நீங்கள் கடக்க
யாரைப்பார்த்து
திருந்தவேண்டுமென்று,

சாலையில் வாகனத்தில்
ஒருத்தியுடன் செல்லும்
ஒருவனைப்பார்த்து
அதைப்போல் நீயும்
செல்லவேண்டுமென்று கூறிய
காதலியிடம் சொன்னேன்
வாகனத்தை நான்
பார்த்துக்கொள்கிறேன்
உன் தங்கையின் சம்மதத்தை
கேட்டுச்சொல் என்று…

என் வயது தோழர்களை
பார்த்தாவது திருந்தச்சொன்ன
என் தாத்தாவிடம் சொன்னேன்
உங்கள் வயது தோழர்கள்
போய்ச்சேர்ந்துக்கொண்டிருக்கிறார்களென்று,

அடுத்தவீட்டு அலமேலு
புதுச்சேலை கட்டியிருக்கிறாளென்று
புலம்பிக்கொண்டிருந்த
மனைவியிடம் சொன்னேன்
எதிர்வீட்டு பார்வதி
மண்ணெண்ணெய் ஊற்றி
கொளுத்திக்கொண்டாலாமென்று…

உபதேசிகளைக்கண்டால்
உரக்கச்சொல்லுங்கள்
உங்களைக்காட்டிலும்
உயர்ந்தவரொருவர்
உலகில் உள்ளாரென்று.

எஸ்.எம்.சுனைத் ஹஸனி.

Please Post your Comments to mahasin2005@yahoo.co.in

April 12, 2008

நீ-கவிதை

கவிதைகளை படைப்பவர்கள்

கவிஞர்கள் என்றால்…
உன்னைப் படைத்த உன்

பெற்றோரும் கவிஞர்கள் தானே…

April 9, 2008

செத்தும் படி

தெருவே கதியென்று கிடந்தால்
நீயும் எவனுக்கோ கணக்கெழுதி
வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்
உங்கப்பாவைபோன்று
என்கிறாள் அம்மா

இப்படியே தொலைக்காட்சியில்
ஜீவனை தொலைத்தால்
எவனும் பொண்ணு தரமாட்டான்
அப்புறம் கெடச்ச ஓட்ட ஒடிசல
வச்சு காலம் தள்ளனும்
என்னை மாதிரி
என்கிறார் அப்பா

ஆகாயத்தில் பறக்கும்
ஒரு விமானத்தைக்காட்டி
நீ அத ஓட்டிட்டு போகணும்
நான் அதுல உக்காந்து வரணும்
என்கிறாள் பட்டி

இப்பிடி புழுதியில ஆடுனா
கம்போண்டரா கூட ஆக முடியாது
நண்பர்களுடன் இருந்தவனை
கதற கதற அலாக்காய் தூக்கி
வீட்டில் சேர்க்கிறார் தாத்தா

மருத்துவத்தை முடித்து
விமான ஓட்டுபவனாகி
பெரிய இடத்துப்பெண்ணை
கைப்பற்றும் வழியை
தன் இரண்டம் வகுப்பு
புத்தக மூட்டைக்குள்
தேடிப்பார்க்கிறான் சிறுவன்.

s.m. Sunaith Hasani

Pls ur Comments to mahasin2005@yahoo.co.in

April 5, 2008

நிந்தனை செய் மனமே…

எடுத்துச்செல் உன்னோடு
உன் நினைவுகளையும்

பூகம்பம் தின்று தீர்த்தாடி
விட்டுச்சென்ற மிச்சத்தில்
லாபமில்லை.

அம்புலிமாமாவில் மட்டுமே படித்த
ராட்சஸி பெண்ணான கதை
நிஜமாய்ப்போன
அதிர்ச்சியிலிருந்து இன்னும்                             நான்மீள்ந்த பாடில்லை.

உன்னை ராட்சஸியாகவும்
நாதஸ்வர மேளதாளத்தை
ஜனங்களின் கூக்குரலாகவும்
உன் ஆபரணங்களை
ஒட்டியிருக்கும் மாமிசத்துண்டுகளாகவும்
கற்பனை செய்து
ஆறுதல் தேடுகிறேன்.
இருந்தாலும் உணர முடிகிறது
இது காலம் கடந்த ஞானமென்று
உன் மனது முனகும் சப்தத்தை.

இப்பொழுதெல்லாம்
இரவின் இருளோடு
பயமும் சேர்ந்து
என்னை தொற்றிக்கொள்கிறது
உன் நினைவுகளில்
சிக்கி சீரழிந்து போவேனென்று.

அதுவும் குளிர்கால இரவென்பதால்
பயமும் சேர்ந்து நீள்கிறது
அதன் இரவைப்போல்
பகலில்தான் உணர்கிறேன்
இரவே ஆயிரம் மடங்கு                 
    மேலென்று.
 

எஸ்.எம்.சுனைத் ஹஸனி.

mahasin2005@yahoo.co.in

அன்னை

அன்னையே….
அகிலத்தில் ஏற்படும் ஆயிரம்
உறவுகளுக்கு முதலுறவாய்
அமைந்தவளே…
என்னை இவ்வுலக வாசிக்க
மாதங்கள் பத்து நீபட்ட
பரதிவிப்பை நானுமறிவேன்.
ஏனைன்றால் உனக்குள்ளிருந்தவள்
நானாயிற்றே தாயே!.
ஆதி முதல் அந்தம் வரை
கற்பித்தவளே…
உனக்காக நானிருப்பேன்
என்றும்!

April 4, 2008

உயிர்

இன்னும் என்னிடம்
என்னடி எதிர்பார்க்கிறாய்..
உயிர் மட்டும்தான் உள்ளது…

மலர்

மனிதனை மனம்
மலரச்செய்யும் மலரே!
மலருக்கு மணமுண்டென்பதை
யாவருமறிவர்,உனக்கு
மனமும் உண்டென்பதை யாரறிவார்?
அதனால்தான் நீ மனங்கள்
இன்னைய பாலமாகிறாயோ?

 

English to Tamil converter

Transliterate to Tamil - தமிழில் தட்டச்சு செய்ய

Type your text here See your results here
The vowels:
a aa, A i ee, I u oo, U
e ae, E ai o oa, O au
Ahh, H
The Consonants:
g, k, kh, c க் nG ங் ch ச் j ஜ் nY ஞ்
d, t ட் nN ண் dh, th த் N ந் n ன்
b, bh ப் m ம் y ய் r ர் R ற்
l ல் L ள் zh ழ் v, w வ்
sh ஷ் s ஸ் h ஹ் f ஃப்

Letters like g and k represent the same thamizh letter. So, "akhilaa", "akilaa", "agilaa", "acilaa" all give "அகிலா"

To get the complete syllable, suffix it with an "a". For eg., "pa" is "ப".

For half syllables, stop with the code for that syllable alone. For eg., "zh" is "ழ்". The general rule of thumb is that with two touching syllables, the former syllable is a half syllable. So, "chcha" is "ச்ச". The syllable "ங்" has to be typed out as "ng" and it is usually followed by a "k". As in, "thangkai" "தங்கை".

Some examples

vijay விஜய்
vidhyaa வித்யா
lathaa லதா
latchumiNaaraayanNan லட்சுமிநாராயணன்
akhilaa அகிலா
pirathaap பிரதாப்
bharath பரத்
kirushnNaswAmi கிருஷ்ணஸ்வாமி

Contact: liyer.vijay@gmail.com

The code this site uses is here. It is free for use.